கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலின் மூலம் மக்கள் அனைவருக்கும் தெரிந்தவரானார் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலிலேயே தனது சின்ன திரை பயணத்தை முடித்து கொண்ட அவர் விரைவிலேயே சினிமா பக்கம் வந்துவிட்டார்.
இவரது நடிப்பில் வெளியான மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. இவ்வளவுக்கும் இடையில் அவரது காதல் பேச்சு வேறு ஒரு பக்கம் எழுந்தது.
பிரியா அவரது கல்லூரி நண்பரான ராஜ்வேலுவை காதலிக்கிறார் என்பது தான் அது. ராஜ்வேல் என்பவர், பிரியாவுடன் ஒன்றாகவே படித்து ப்ரியாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பிடித்தமானவர்.
தற்போது சிட்னியில் ஐ.டி.துறையில் வேலை பார்க்கிறார். அவரது பேஸ்புக் பக்கத்தில் சமீபத்திய போஸ்டாக ப்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னது உள்ளது.