சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மட்டும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.
“பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம்.. மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துகொன்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்” என புஷ்பவனம் குப்புசாமி தாக்கி பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த செந்தில், பாடல்களில் இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்களே இல்லை என்றும் எங்கள் மூத்த கலைஞர்கள் பாடிய பாடல்களை தான் பாடி வருகிறோம். ஒருவேளை அதில் ஆபாச வார்த்தைகள் இருந்தால் அந்த வார்த்தைகளை நீக்கிவிட்டு வேறொரு வார்த்தை போட்டு தான் பாடி வருகிறோம் என்றார்.