சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறுகின்றது.
அதை விட இவரின் கதாபாத்திரம் அனைத்தும் ரசிகர்களை கவர்கின்றது, மேலும், யு-டியூபில் இவருடைய பாடல்கள் தொடர்ந்து பல மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்து வருகின்றது.
இந்நிலையில் சாய் பல்லவி ஒரு பேட்டியில் திருமணம் பற்றி பேசியுள்ள. அவர் எப்போதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். காரணம் கல்யாணம் செய்துகொண்டால் பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது.
அதனால் திருமணம் செய்யமாட்டேன் என அவர் கூறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.